Higher Education Guidance: உயர் கல்வியில் சேராத மாணவர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி; எங்கெல்லாம்? கலந்துகொள்வது எப்படி?

7 months ago 5
ARTICLE AD
<p>உயர் கல்வி படிப்பைத்&zwnj; தொடராத மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள்&zwnj; மற்றும்&zwnj; வழிகாட்டுதல்&zwnj; வழங்குவதற்காக நான்&zwnj; முதல்வன்&zwnj; உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; " கல்லூரி கனவு நிகழ்ச்சி " நடைபெற உள்ளது எனவும் அதில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சித்&zwnj;தலைவர்&zwnj; ரஷ்மி சித்தார்த்&zwnj; ஐகடே தெரிவித்துள்ளார்&zwnj;.</p> <p>அனைத்து அரசு / சென்னை /ஆதிதிராவிட நல மேல்நிலைப்&zwnj; பள்ளிகளில்&zwnj; 2022- 23 மற்றும்&zwnj; 2023- 24 ஆம்&zwnj; கல்வி ஆண்டுகளில்&zwnj; 12 ஆம்&zwnj; வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத/ தேர்வு எழுதாத/ இடைநின்ற மாணவர்களில்&zwnj; உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத / உயர் கல்விக்கு விண்ணப்பித்து பல்வேறு காரணங்களினால்&zwnj; கல்லூரியில்&zwnj; சேராமல் 5666 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உயர் கல்வி படிப்பைத்&zwnj; தொடரத் தகுந்த ஆலோசனைகள்&zwnj; மற்றும்&zwnj; வழிகாட்டுதல்&zwnj; வழங்குவதற்காக நான்&zwnj; முதல்வன்&zwnj; உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; "கல்லூரி கனவு நிகழ்ச்சி" மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.</p> <p>சென்னை மாவட்டம்&zwnj; ஒருங்கிணைந்த பள்ளிக்&zwnj; கல்வி, நான்&zwnj; முதல்வன்&zwnj; உயர்கல்வி வழிகாட்டுதல்&zwnj; திட்டம்&zwnj; - பள்ளி மாணவ மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில்,&nbsp; சென்னை மாவட்டத்தில்&zwnj; கீழ்க்காணும்&zwnj; அட்டவணையில்&zwnj; உள்ளவாறு நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது.</p> <p><strong>கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெறும்&zwnj; நாள்&zwnj;</strong> இன்று (14.5.2025)- அடையார்&zwnj;, கோடம்பாக்கம்&zwnj;, தேனாம்பேட்டை ஒன்றியங்கள்</p> <p><strong>கல்லூரி கனவு நிகழ்ச்சி நடக்கும் இடம்-</strong> அண்ணா நூற்றாண்டு நூலகம்&zwnj;, கோட்டூர்புரம்&zwnj;</p> <p>16.5.25 - அடையார்&zwnj;, கோடம்பாக்கம்&zwnj; ஒன்றியங்கள்- செயின்ட்&zwnj; பீட்ஸ்&zwnj; அகாடமி, சீனியர்&zwnj; செகண்டரி பள்ளி, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை.</p> <p>19.5.25 - திரு.வி.க நகர்&zwnj;, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர்&zwnj; ஒன்றியங்கள் - வெள்ளையன்&zwnj; செட்டியார்&zwnj; மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர்&zwnj;</p> <p>&nbsp;20.5.25 - அண்ணா நகர்&zwnj;, இராயபுரம்&zwnj; தெற்கு, இராயபுரம்&zwnj; வடக்கு, தேனாம்பேட்டை ஒன்றியங்கள் - செயின்ட்&zwnj; பீட்ஸ்&zwnj; அகாடமி, சீனியர்&zwnj; செகண்டரி பள்ளி, சாந்தோம்&zwnj; நெடுஞ்சாலை, சென்னை.</p> <p>"கல்லூரி கனவு நிகழ்ச்சி" மாணவர்கள்&zwnj; மற்றும்&zwnj; பெற்றோர்களுக்கு தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கும்&zwnj; இத்தகைய அரிய வாய்ப்பினை மாணவர்கள்&zwnj; பயன்படுத்தி கொண்டு தங்களது கல்லூரிக்&zwnj; கனவை நிறைவேற்றிட முகாமில்&zwnj; கலந்துகொள்ளுமாறு மாணவர்கள்&zwnj; மற்றும்&zwnj; பெற்றோர்களுக்கு சென்னை ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்</p>
Read Entire Article