<p><strong>Haryana Assembly Election 2024</strong>: ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலானது வரும் அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.</p>
<p>இந்நிலையில் மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி.நட்டா வியாழக்கிழமை ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார், அதில் அக்னிவீரர்களுக்கு அரசு வேலைகள், 24 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.</p>
<p><strong>இந்த நிலையில் ஹரியான தேர்தல் அறிக்கையில் பாஜக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகளை பார்ப்போம். </strong></p>
<ul>
<li>லாடோ லக்ஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதம் ₹2,100 வழங்கப்படும்</li>
<li>அவல் பாலிகா யோஜனா திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு மாணவருக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படும்.</li>
<li>அரசு மருத்துவமனைகளில் இலவச டயாலிசிஸ்.</li>
<li>ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒலிம்பிக் விளையாட்டு நர்சரி.</li>
<li>ஹர் கர் கிரிஹானி யோஜனா திட்டத்தின் கீழ் ₹500க்கு சிலிண்டர்.</li>
<li>ஒவ்வொரு அக்னி வீரருக்கு அரசு வேலை உத்தரவாதம்.</li>
<li>புதிய வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துதல்.</li>
<li>IMT கர்கோடாவின் வழியில் 10 தொழில் நகரங்களை நிர்மாணித்தல் மற்றும் ஒரு நகரத்திற்கு 50,000 உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்காக தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள்.</li>
<li>சிராயு-ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10 லட்சம் வரை இலவச சிகிச்சை மற்றும் குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதி.</li>
<li>அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) 24 பயிர்களை கொள்முதல் செய்தல்.</li>
<li>இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை உறுதி.</li>
<li>தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தில் இருந்து ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு மற்ற வேலை வாய்ப்புகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை.</li>
<li>நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஐந்து லட்சம் வீடுகள்.</li>
<li>சிறிய பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு (36 சமூகங்கள்) போதுமான பட்ஜெட்டில் தனி நல வாரியங்கள்.</li>
<li>DA மற்றும் ஓய்வூதியங்களை இணைக்கும் அறிவியல் சூத்திரத்தின் அடிப்படையில் அனைத்து சமூக மாத ஓய்வூதியங்களிலும் அதிகரிப்பு.</li>
<li>இந்தியாவில் உள்ள எந்த அரசு கல்லூரியிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் ஹரியானாவைச் சேர்ந்த OBC மற்றும் SC சாதி மாணவர்களுக்கு முழு உதவித்தொகை.</li>
<li>ஹரியானா மாநில அரசு முத்ரா திட்டத்துடன் சேர்த்து அனைத்து OBC வகை தொழில் முனைவோருக்கு ₹25 லட்சம் வரை கடனுக்கு உத்தரவாதம் அளிக்கும்.</li>
<li>ஹரியானாவை உலகளாவிய கல்வியின் மையமாக மாற்றுவதன் மூலம் நவீன திறன்களில் பயிற்சி.</li>
<li>தெற்கு ஹரியானாவில் உள்ள சர்வதேச அளவிலான ஆரவல்லி ஜங்கிள் சஃபாரி பூங்கா </li>
</ul>