Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!

1 year ago 7
ARTICLE AD
<p>டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கென, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான பதிவுகள் எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.</p> <p>குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி மட்டுமின்றி இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. தற்போது வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.</p> <h2><strong>6 ஆயிரத்து 244 இடங்களுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்</strong></h2> <p>2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் &nbsp;ஜூன் 9ஆம் தேதி 7247 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர். 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களே உள்ள இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.</p> <p>ஏற்கெனவே 2022ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியான நிலையில், காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும், அரசு காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.</p> <p>இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வை எழுதிய தேர்வர்கள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகள் எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக <a class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3 r-1loqt21" dir="ltr" role="link" href="https://x.com/hashtag/increase_group4_vacancy?src=hashtag_click">#increase_group4_vacancy</a> என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.&nbsp;</p> <p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/c23ba2eff94fe8b020ac6699c17743471726649409463332_original.jpg" /></p> <p>இதுகுறித்துத் தேர்வர்கள் சிலர் கூறும்போது, &rsquo;&rsquo;<strong><a title="டிஎன்பிஎஸ்சி" href="https://tamil.abplive.com/topic/tnpsc" data-type="interlinkingkeywords">டிஎன்பிஎஸ்சி</a> குரூப் 4</strong></p> <p>2018- 11230 பணியிடங்கள்</p> <p>2019- 9800 பணியிடங்கள்</p> <p>2022- 10300 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.</p> <p>எனினும் 2024-ல் 6244 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.</p> <p>கிராமப்புற முதல் தலைமுறை பட்டதாரிகள் நலன் கருதி, குரூப் 4 பணியிடங்களை 15000 பணியிடங்கள் நிரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்&rsquo;&rsquo; என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> <p>மேலும் பேசிய அவர்கள், &rsquo;&rsquo;ஆண்டுக்கு சுமார் 10,000 என்ற அளவில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டிய அரசு குறைவாகவே அறிவித்திருப்பது எங்களுக்கு&zwnj; பெருத்த ஏமாற்றத்தையும்&zwnj;, மன உளைச்சலையும்&zwnj; ஏற்படுத்தியுள்ளது. இதனால்&zwnj; பல ஆண்டுகளாக படிக்கும்&zwnj; மாணவர்கள்&zwnj;, திருமணம்&zwnj; ஆன பெண்கள், கைக்குழந்தையோடு படிக்கும்&zwnj; தாய்கள்&zwnj;, பயிற்சி நிறுவனம்&zwnj; சென்று படிக்க இயலாத கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும்&zwnj; அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்&zwnj; 30 வயதிற்கும்&zwnj; மேல்&zwnj; ஆகியும்&zwnj; திருமணம்&zwnj; ஆகாத ஆண்&zwnj;, பெண்&zwnj; தேர்வர்களின்&zwnj; அரசுப் பணிக் கனவு, கனவாகவே போய்விடும்&zwnj; நிலையில்&zwnj; உள்ளது&rsquo;&rsquo; என்று வேதனை தெரிவித்துள்ளனர்.</p> <p>பணியிடங்களை உயர்த்துவதன் மூலம் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமின்றி, தேர்வர்களும் போட்டித் தேர்வுகளுக்கு அதிக அளவில் தயார் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
Read Entire Article