<p>அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் மாணவ- மாணவி கட்டிப்பிடித்து நடனமாடும் வீடியோ ஒன்று, ''பெற்றோர்களே உஷார்'' என்று தலைப்பிட்டு வாட்ஸப்பில் இந்த வீடியோ வைரலாகப் பகிரப்பட்டு வந்தது.</p>
<p>இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளது.</p>
<p>அதில், ’’அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் ஆடல் பாடல் நடைபெறவில்லை. அவ்வாறு தவறான காணாளி பரவி வருகிறது. இது அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி அல்ல. அதில் ஆடுபவர்கள் அரசுப்பள்ளி மாணவ- மாணவிகளும் அல்ல.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்று பரவும் தவறான காணொளி!<a href="https://twitter.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://twitter.com/TNDIPRNEWS?ref_src=twsrc%5Etfw">@TNDIPRNEWS</a> <a href="https://t.co/aeRzvq91TT">pic.twitter.com/aeRzvq91TT</a></p>
— TN Fact Check (@tn_factcheck) <a href="https://twitter.com/tn_factcheck/status/1901896627763429796?ref_src=twsrc%5Etfw">March 18, 2025</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூரைச் சேர்ந்த நடனக் குழுவினர், பள்ளிச் சீருடை அணிந்து திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதை அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று தவறாகப் பரப்பி வருகின்றனர்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>