<p>கடந்த சில ஆண்டுகளாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதன் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால் முறைகேடுகள் நடந்திருப்பதாக பல இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>இந்த நிலையில், EVM தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.</p>
<p>இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதவில், "நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், வழங்கப்பட்டதாகத் தோன்ற வைக்க வேண்டும். ஜனநாயகம் மேலோங்குவது மட்டுமல்லாமல், சந்தேகத்திற்கு இடமின்றி நடைமுறையில் இருப்பதாகவும் தோன்ற வேண்டும்.</p>
<p> </p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Just as justice should not only be served, but should also appear to have been served, so should democracy not only prevail but must appear to be prevalent undoubtedly. <br /><br />In electoral practices across the world in almost every advanced democracy, paper ballots are used, not EVMs.…</p>
— YS Jagan Mohan Reddy (@ysjagan) <a href="https://twitter.com/ysjagan/status/1802892290257789049?ref_src=twsrc%5Etfw">June 18, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>உலகம் முழுவதும் தேர்தல் நடைமுறைகளில், ஏறக்குறைய அனைத்து மேம்பட்ட ஜனநாயக நாட்டிலும் காகித வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவது இல்லை. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்துவதில் நாமும் அதை நோக்கி நகர வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.</p>
<p> </p>