ECR சாலையில் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளே உஷார்! முழு விவரம்!

2 months ago 4
ARTICLE AD
<p dir="ltr" style="text-align: left;">"சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செப்டம்பர் 21ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட செய்யப்பட உள்ளதாக தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்"</p> <p dir="ltr" style="text-align: left;">தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணையம் (SDAT) மற்றும் HCL காப்பிடல் பிரைவேட் லிமிடெட் இணைந்து வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி , இந்திய சைக்கிள் சம்மேளனத்தின் தலைமையில் "சைக்ளோத்தான் சென்னை 2025" நிகழ்ச்சியை நடத்தவுள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழில்முறை மற்றும் மிதிவண்டி ஒட்டிகள் இதில் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் சைக்கிள் பயணத்தையும் சாலை பாதுகாப்பையும் ஊக்குவிப்பதாகும்.</p> <p dir="ltr" style="text-align: left;">கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்</p> <p dir="ltr" style="text-align: left;">இந்நிகழ்ச்சி, கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) உள்ள மாயாஜால் மல்டிபிளெக்ஸிலிருந்து தொடங்கி, மாமல்லபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வரை சென்று, மீண்டும் மாயாஜால் மல்டிபிளெக்ஸிலேயே போட்டி நிறைவடையும். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்காக, செப்டம்பர் 21, 2025 அன்று அதிகாலை 04:30 மணி முதல் காலை 08:30 மணி வரை ECR சாலையில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பங்கேற்பாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.</p> <h3 dir="ltr" style="text-align: left;">போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ள சாலைகள்:</h3> <p dir="ltr" style="text-align: left;">1) சென்னை நகரிலிருந்து மாமல்லபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அக்கரை சந்திப்பிலிருந்து கே.கே. சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்பு ஓ.எம்.ஆர். மற்றும் படூர் வழியாக மாமல்லபுரம் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.</p> <p dir="ltr" style="text-align: left;">2) மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பூஞ்சேரி சந்திப்பிலிருந்து எஸ். எஸ். என். ரவுண்டானா கேளம்பாக்கம் சந்திப்பு நாவலூர் சோழிங்கநல்லூர் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.</p> <p dir="ltr" style="text-align: left;">3) ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p> <p dir="ltr" style="text-align: left;">4) அதேசமயம், மாயாஜால் முதல் கோவளம் சந்திப்பு. வரையிலான பக்க சாலை, சைக்கிள் ஓட்டப் பந்தயத்திற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தப்படும்.</p> <p dir="ltr" style="text-align: left;">எனவே, சீரான போக்குவரத்திற்காக, வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>
Read Entire Article