Diwali Muhurat Trading:தீபாவளி முகூர்த்த வர்த்தக நேரம்; எப்போது தொடங்கும்?விவரம்!

1 year ago 7
ARTICLE AD
<p>முகூர்த்த டிரேடிங் நாளில் வர்த்தகம் செய்தால் ஆண்டு முழுவதும் லாபகரமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி முகூர்த்த வர்த்தக நேரம் வரும் நவம்பர் 1-ம் தேதி மாலை 6.15 மணி முதல் 7:15 வரை முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>முகூர்த்த நாள் என்பதால் நவம்பர் -1ம் தேதி பங்குச்சந்தை முழு நாளும் செயல்படாது. முகூர்த்த நாள் என்பதால் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நேரத்தில் பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறும். அப்போது எந்தெந்த பங்குகளை வாங்கலாம் என்பதை நிபுணர்களின் ஆலோசனை பெற்று செயல்படலாம்.</p> <p><strong>தீபாவளி முகூர்த்த சிறப்பு டிரேடிங்</strong></p> <p>ப்ரீ ஓப்பன் செஷனாக 15 நிமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 6 மணி முதல் 6.15 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. block deal window மாலை 5.45 மணிக்கு திறக்கப்படும். 6 மணி வரை நடைபெறும்.&nbsp;</p> <p>வழக்கமான சந்தை அமர்வு 6.15 மணி முதல் 7.15 மணி வரை நடைபெறும். வர்த்தக மாற்றத்தை ( trade modification) 7.25 மணி வரை மேற்கொள்ளலாம். கடைசியாக நிறைவு அமர்வு (closing session) இரவு 7.25 மணி முதல் 7.35 மணி வரை நடைபெறும். &nbsp;&nbsp;</p> <p><strong>நல்ல தொடக்கம்</strong></p> <p>இந்த நேரத்தில் பங்குகளை வாங்குவது அல்லது விற்பனை செய்வது என எதுவானலும் அது நிறைவான வளத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.&nbsp;</p> <p>&nbsp;கடந்த 10 சிறப்பு முகூர்த்த வர்த்தக நாட்களில்,7 அமர்வுகளில் சென்செக்ஸ், நிப்டி ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.&nbsp;</p> <p><strong>ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்:</strong></p> <p>ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு ஒன்றின் விலை ரூ.3,500 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெலிகாம் நிறுவனங்களின் விலை உயர்வு, ரீடெயில் தொழில் துறை மீண்டுள்ளது ஆகியவற்றின் காரணமாக ரிலையன்ஸ் பங்கு வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p><strong>பவர்கிரிட் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா:</strong></p> <p>பவர்கிரிட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினாலும் நல்ல பலன் கிடைக்கும். இதன் விலை ஒன்று ரூ.383 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி நிஃப்டி 26,216 ஆக உயர்ந்து புதிய சாதனை படைத்தது. முகூர்த்த நேரத்திலும் சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகூர்த்த நேரத்தில் கவனத்துடன் பங்குகளை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.&nbsp;</p> <p>பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்படுள்ள பங்குச்சந்தை வர்த்தகம் பற்றிய பரிந்துரைகள் நிபுணர்களின் கருத்து மட்டுமே. ABP நாடு நிபுணர்களின் தெரிவித்த தகவலை மட்டும் வழங்குகிறது.</p> <p>&nbsp;</p>
Read Entire Article