Dahi Wala Paneer: தோசை, சப்பாத்திக்கு ஏற்ற காம்போ; பனீர் க்ரேசி இப்படி செய்து அசத்துங்க!

1 year ago 7
ARTICLE AD
<p>பனீர் ப்ரியர்களா? இது தயிர், பனீர் இரண்டையும் வைத்து சுவையான க்ரேவி குறைந்த நேரத்தில் தயார் செய்துவிடலாம்.</p> <p>என்னென்ன தேவை?</p> <p>பனீர் -250 கி</p> <p>மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்</p> <p>சீரக தூள் - 1/2 தூள்</p> <p>மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்</p> <p>மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்</p> <p>எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்</p> <p>ஊற வைத்த முந்திரி - ஒரு கப்</p> <p>உப்பு தேவையான அளவு&nbsp;</p> <p>தயிர் - ஒரு கப்</p> <p>பேப்ரிக்கா - சிறிதளவு</p> <p>பச்சை மிளகாய் - 3</p> <p>கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்</p> <p>கருப்பு மிளகு தூள் - 1 டீ ஸ்பூன்</p> <p>மேத்தி இலைகள் - ஒரு டீஸ்பூன்</p> <p>கொத்தமல்லி இலை - தேவையான அளவு</p> <p><strong>செய்முறை:</strong></p> <p><strong>பனீர் மசாலா:</strong></p> <p>பனீர் சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பனீர், உப்பு, மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும். 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். முந்திரியை தண்ணீரில் ஊற வைக்கவும்.</p> <p>இப்போது தயிர் மசாலா தயாரிக்க வேண்டும். புளிக்காத, கெட்டியான தயிரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதோடு பேப்ரிக்கா, மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு,மிளகு தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.</p> <p>இப்போது, அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாய் வைக்கவும். அதில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து ஊறவைத்த பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும். 2 நிமிடங்கள் கழித்து தயிர் கலவையை சேர்த்து கொதிக்க விடவும். இப்போது ஊற வைத்த முந்திரியை நன்றான விழுதாக அரைத்து சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதித்ததும் பனீர் க்ரேவி தயார்.&nbsp;</p> <p><strong>பனீர் புலாவ்:</strong></p> <p><strong>தேவையான பொருட்கள்</strong></p> <p>அரிசி - ஒரு கப்</p> <p>பனீர் - 1/2 கிகி</p> <p>வெங்காயம் -இரண்டு</p> <p>&nbsp;தேங்காய் பால் - ஒரு கப்</p> <p>பச்சை மிளகாய் - 2&nbsp;</p> <p>இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்</p> <p><strong>தாளிக்க</strong></p> <p>சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ - ஒரு ஸ்பூன்</p> <p>சீரகம் - ஒரு ஸ்பூன்</p> <p>நிலக்கடலை / முந்திரி - ஒரு டீஸ்பூன்</p> <p>புதினா, கொத்தமல்லி - சிறிதளவு</p> <p>பச்சை மிளகாய் - 2</p> <p><strong>செய்முறை</strong></p> <p>தேங்காய் பால் எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய்,இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். மிதமான தீயில் அடுப்பில் குக்கரை வைத்து வெண்ணெய் ஊற்றி சூடாகியதும் அதில் பட்டை, சோம்பு, கிராம்பு, முந்திரி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போடவும்.&nbsp; முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.</p> <p>பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே அதன் நிறம் மாறும். அப்போது அரிசி, சிறிய துண்டுகளாக நறுக்கிய பனீர்&nbsp; கிளறவும். இப்போது அரிசிக்கு தேவையான அளவு தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் ஊற்றவும். இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வெண்டைக்காய் ரோஸ்ட் என உங்களுக்கு விருப்பமானதை உடன் வைத்து சாப்பிட தேர்வு செய்யலாம்.&nbsp;</p> <hr /> <h2>&nbsp;</h2>
Read Entire Article