"CM Seat தான் Target” - விஜய்க்கு வேறு பதவி வேண்டாம் - கோவையில் செங்கோட்டையன் பளீர் பேட்டி...

4 weeks ago 4
ARTICLE AD
<p>தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராக வந்து மக்களின் நலனை காப்பதற்கான நோக்கத்தின் அடிப்படையிலேயே தனது சினிமா துறையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.</p> <p><strong>234 தொகுதிகளிலும் போட்டி</strong></p> <p>கோவை விமான நிலையத்தில் &nbsp;செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன்,&nbsp;டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் த.வெ.க தலைவர் விஜய் உரிய பதிலை அளித்து உள்ளார். முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டுவிட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு விஜய் வந்திருப்பதாக தெரிவித்தார்.&nbsp;தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருவது, தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதை காட்டுவதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.</p> <p>மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை கேள்வி குறியாக மாறியுள்ளதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.&nbsp;&nbsp;தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற மன நிலையில் மக்கள் உள்ளதாகவும்,மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார். இதேபோன்று &nbsp;234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் த.வெ.க கட்சியில் உள்ளனர்.</p> <p>த.வெ.க மற்றும் என்.டி.ஏ கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> முதலமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார் என தெரிவித்தார்.</p>
Read Entire Article