Chennai one day trip: போர் அடிக்குதா..! சென்னை பக்கத்துல இருக்கிற ஹில் ஸ்டேஷன்னுக்கு போயிட்டு வாங்க..!

7 months ago 5
ARTICLE AD
<p style="text-align: left;">கோடை காலம் தொடங்கிவிட்டது, பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. குழந்தைகள் வெளியில் கூட்டிச் செல்ல வேண்டும் என அடம் பிடிக்கவும் தொடங்கி இருப்பார்கள். அவர்களை எப்போதும் போல சென்னையில் இருக்கும் மால்கள், தியேட்டர் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ந்து கூட்டி செல்வது போர் அடித்து விடும். எனவே, சென்னையில் இருந்து ஒரு நாள் பிக்னிக் செல்லக்கூடிய இயற்கை சுற்றுலா தளங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.</p> <p style="text-align: left;">மலைப்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டுமென ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அப்படி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஊட்டி அல்லது கொடைக்கானல் ஆகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கான பயணம் நேரம் மற்றும் செலவு என்பது அதிகம். சென்னைக்கு அருகே இருக்கும் மலை பிரதேசங்கள் குறித்து இந்த செயின் தொகுப்பில் பார்க்க உள்ளோம்.&nbsp;</p> <h3 style="text-align: left;">நகரி மலைத்தொடர் - Nagari Hills</h3> <p style="text-align: left;">நகரி பகுதியில் அமைந்துள்ள நகரி மலைகள் கோடைகாலத்தில், வெப்பத்திலிருந்து தப்பித்து செல்லக்கூடிய சிறந்த மலைப்பிரதேசமாக இருக்கிறது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 855 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக புகைப்பட கலைஞர்களுக்கு சொர்க்க பூமியாக இந்த மலைப்பிரதேசம் இருக்கிறது. சென்னையில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான சுற்றுலா தலமாக இது இருக்கும்.&nbsp;</p> <h3 style="text-align: left;">நாகலாபுரம் மலை - Nagalapuram Hills Station&nbsp;</h3> <p style="text-align: left;">சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த நாகலாபுரம் மலை. நாகலாபுரம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக இருக்கின்றது &zwnj; அதேபோன்று மலை ஏற்றமும் இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் அம்சமாக இருக்கின்றது. சாகசத்தை விரும்புபவர்களுக்கு நாகலாபுரம் மிகச்சிறந்த மலை பிரதேசமாக இருக்கிறது. சென்னையில் இருப்பவர்களுக்கு மிகவும் ஏற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக இது இருக்கிறது.&nbsp;</p> <h3 style="text-align: left;">மாமண்டூர் காடுகள் - mandoor forest</h3> <p style="text-align: left;">அந்தமான் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, தெளிந்த நீர், இயற்கை கொஞ்சம் பசுமை காடுகள் தான். இவற்றை சென்னை அருகே பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் வரவேண்டியது மாமன்று காடுகளுக்கு தான். கிழக்கு தொடர்ச்சி மலைகளின் மூங்கில் காடுகள், அரிய மரங்களுக்கு நடுவே பச்சை நிற தெளிந்த நீர் பார்ப்பதற்கே இயற்கை அன்னையின் கலை படைப்பு போல் காட்சியளிக்கும்.&nbsp;</p> <p style="text-align: left;">ஆந்திரப் பிரதேச மாநில வனத்துறையினர் கட்டுப்பாட்டில் மாமண்டூர் காடுகள் உள்ளன. இந்த இடத்தில் குடும்பத்துடன் செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆந்திர வனத்துறையினர் பல்வேறு பேக்கேஜ்கள் வைத்துள்ளனர். ட்ரெக்கிங், கேம்பிங், பாரஸ்ட் சஃபாரி, சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்து இருக்கின்றன. குழந்தைகளுடன் சென்றால் விளையாடுவதற்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எளிதில் பார்க்கக் கிடைக்காத பல்வேறு அரிய காட்சிகள் அங்கு நிறைந்திருக்கின்றன.</p> <h3 style="text-align: left;">காஞ்சகிரி மலைகள் - Kanchanagiri Hills</h3> <p style="text-align: left;">ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த மலைகள் அமைந்துள்ளன. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இந்த சுற்றுலாத்தலம் இருந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் பச்சை நிறமாகவே இயற்கை கொஞ்சும் அழகுடன் இந்த மலைகள் காட்சி அளிக்கும். இந்த மழையில் மலையேற்றமும் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. மனதை மயக்கக்கூடிய இயற்கை காட்சிகள் நிறைந்த இடமாக இது இருக்கிறது. ஒரு நாள் பிக்னிக் விரும்புபவர்களுக்கு மிக சூப்பரான ஸ்பாட்டாக இது இருக்கிறது.</p>
Read Entire Article