Chennai News: முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம்; ரூ.11 கோடி மோசடி - 3 பேர் கைது

3 months ago 4
ARTICLE AD
<p style="text-align: left;"><strong>ஆசை வார்த்தை கூறி , இரட்டிப்பு பணம் மற்றும் கடனாக நகைகளை வாங்கி ரூ. 11 கோடி மோசடி&nbsp;</strong></p> <p style="text-align: left;">சென்னை வானகரத்தில் போயா கான் ஜீவல்லர்ஸ் என்ற நகைக்கடை நடத்தி வருபவர் ஸ்ரீதேவி ( வயது 50 ). இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் , அண்ணாநகரை சேர்ந்த சுனிதா பிரகாஷ் , அவரது கணவர் பிரகாஷ் மற்றும் அனிதா ஸ்ரீதர், சஞ்சய் சோலங்கி ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர். கடந்த, 2022 பிப்ரவரி முதல் 2024 டிசம்பர் 6 வரை கடனாக 5.13 கோடி 9.5 ரூபாய் மதிப்புள்ள, கிலோ ரூபாய் தங்கம், 1.30 கோடி ரூபாய் மதிப் புள்ள வைர நகைகளை பெற்றனர்.</p> <p style="text-align: left;">அத்துடன், முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம் தருவதாக பெற்ற, 4.45 கோடி ரூபாய் என , மொத்தம் 10.89 கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றி விட்டனர். இது குறித்து கேட்ட போது , பிரகாஷிம், சிவகுருநாதனும், என்னை மிரட்டியதோடு , அவதுாறான வார்த்தைகளால் திட்டி துன்புறுத்தினர். எனவே மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் இழந்த தங்க, வைர நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.</p> <p style="text-align: left;">மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஸ்ரீதேவியை ஏமாற்றும் நோக்கத்தில் நகைகளை பெற்று அதற்கான பணத்தை திரும்ப கொடுக்காமல் , வழக்கறிஞர் சிவகுருநாதன் என்பவர் வாயிலாக மிரட்டியது தெரியவந்தது. சிவகுருநாதன் மீது பெண்கள் வன்கொடுடை தடுப்பு சட்டம் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மோசடியில் ஈடுபட்ட அண்ணாநகரை சேர்ந்த சுனிதா பிரகாஷ் ( வயது 43 ) , திருவான்மியூரைச் சேர்ந்த சிவகுருநாதன் ( வயது 47 ) ஆகிய மூவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.</p> <p style="text-align: left;"><strong>கட்டி வைத்து அடித்து வீடியோவை " முகநூலில் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்</strong></p> <p style="text-align: left;">சென்னை கோடம்பாக்கத்தில் இறைச்சி கடை நடத்தி வருபவர் அப்சல் ( வயது 43 ) இவரது கடையில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது டெடர் ( வயது 22 ) பைஜன் ( வயது 19 ) சவுரவ், அஷ்ரப், ஜாவித் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களை கோடம்பாக்கத்தில் உள்ள வெள்ளாளர் தெருவில் உள்ள வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடையில் பணிபுரியும் ஜாவித் என்பவர் உரிமையாளர் அப்சலிடம் நம் கடையில் பணிபுரியும் சவுரவ் மற்றும் சிலர், அறையில் ஒரு வரை கட்டி வைத்து தாக்கி , அதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.</p> <p style="text-align: left;">அதிர்ச்சியடைந்த அப்சல் சம்பவ இடத்திற்கு சென்று கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருந்த மற்றொரு இறைச்சி கடை ஊழியரான பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஜாவித் என்பவரை மீட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவரை கட்டி வைத்து தாக்கியோரில் , இருவரை பிடித்து வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், கடந்த பக்ரீத் பண்டிகையின் போது இவர்கள் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, முகமது ஜாவித் போதை தலைக்கேறி சவுரவை தரக்குறைவாக ஒருமையில் பேசியுள்ளார்.</p> <p style="text-align: left;">இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தால் ஆத்திரமடைந்த சவுரவ் , பேச வேண்டும் என முகமது ஜாவித்தை வரவழைத்து , நண்பர்களுடன் சேர்ந்து கட்டி வைத்து இரும்பு பைப்பால் தாக்கியது தெரிய வந்தது. இதுதொடர்பாக முகமது டெடர், பைஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சவுரவ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.</p>
Read Entire Article