CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!

10 months ago 7
ARTICLE AD
<p>2025ஆம் ஆண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்று முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.</p> <p>சிபிஎஸ்இ வாரிய மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு &nbsp;பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது. 10 ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி முடிவடைகிறது. தேர்வுகள் காலை 10.30 மணிக்குத் தொடங்குகின்றன. முதன்முறையாக, தேர்வுகள் தொடங்குவதற்கு 86 நாட்களுக்கு முன்பே தேதித்தாள்கள் வெளியிடப்பட்டன.</p> <h2><strong>12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு</strong></h2> <p>தொழில்முனைவோருக்கான முதல் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதியும், உடற்கல்வித் தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதியும், இயற்பியல் தேர்வு பிப்ரவரி 21ஆம் தேதியும் நடைபெறும். வேதியியல் தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதியும், கணிதம் மற்றும் பயன்பாட்டுக் கணிதம் மார்ச் 8-ஆம் தேதியும், ஆங்கிலத் தேர்வு மற்றும் ஆங்கிலக் கோர்வை மார்ச் 11-ஆம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.<br />உயிரியல் மார்ச் 25ம் தேதியும், தகவல் நடைமுறைகள், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மார்ச் 29ம் தேதியும்.&nbsp; 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 18ம் தேதி முடிவடையும் என்றும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 4, 2025ல் முடிவடையும் என்றும் வாரியம் அறிவித்துள்ளது.&nbsp;மொத்தம் 44 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.</p> <p>இந்த நிலையில் வெகு விரைவிலேயே 10, 12ஆம் வகுப்பு அனுமதிச் சீட்டு வெளியாக உள்ளது.&nbsp;ஹால் டிக்கெட் வெளியானதும் தனித்தேர்வர்களும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பெறலாம். வழக்கமான முறையில் தேர்வை எழுதும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து ஹால் டிக்கெட்டை சீட்டாகப் பெறுவர்.</p> <p>ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதேபோல 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொழில்முனைவோருக்கான தேர்வுடன் ஆரம்பிக்கிறது.</p> <h2><strong>&nbsp;ஹால் டிக்கெட்டில் என்ன இருக்கும்?</strong></h2> <ul> <li>தேர்வரின் பெயர்</li> <li>பதிவு எண்</li> <li>பிறந்த தேதி</li> <li>பெற்றோரின் பெயர்</li> <li>தேர்வு எழுத உள்ள பாடங்கள்</li> <li>தேர்வு மையம்</li> <li>அனுமதிச் சீட்டு எண் &nbsp;<br /><br /></li> </ul> <h2><strong>சிபிஎஸ்இ எச்சரிக்கை</strong></h2> <p>சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றாத மாணவர்கள் தேர்வு எழுதவே தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.</p> <p><strong>தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்</strong></p> <ul> <li>அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட காகிதத் துண்டுகள்,</li> <li>கால்குலேட்டர் (கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்),</li> <li>பென் டிரைவ்கள்,</li> <li>மின்னணு பேனா/ ஸ்கேனர் போன்றவை.</li> <li>எந்தவொரு தொலைத்தொடர்பு சாதனமும் பயன்படுத்தப்படக் கூடாது.</li> <li>மொபைல் போன், புளூ டூத், இயர் போன்கள், மைக்ரோஃபோன், பேஜர், ஹெல்த் பேண்ட், ஸ்மார்ட் வாட்ச், கேமரா போன்றவை.</li> <li>பணப்பை, கண்ணாடி, கைப்பைகள், பைகள் போன்ற பிற பொருட்கள்.</li> <li>நீரிழிவு நோயாளிகள் தவிர, திறந்த அல்லது பேக் செய்யப்பட்ட உண்ணக்கூடிய எந்தவொரு பொருளைப் பயன்படுத்துவது விதிகளின்படி தண்டனைக்கு உரிய செயல் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.&nbsp;</li> </ul> <p>&nbsp;</p>
Read Entire Article