<p>Budget 2025 Education Sector: நாடு முழுவதும் 23 ஐஐடிக்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் இதன்மூலம் 6,500 மாணவர்கள் பயன்பெறுவர் எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். </p>
<p>நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளை, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்து, முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.</p>
<p>அதில் உயர் கல்வித்துறைக்கு அவர் அறிவித்துள்ள அறிவிப்புகள். </p>
<p>’’நாடு முழுவதும் 23 ஐஐடிக்கள் விரிவாக்கம் செய்யப்படும். இதன்மூலம் 6,500 மாணவர்கள் பயன்பெறுவர்,</p>
<p>அடுத்த கல்வி ஆண்டில் புதிதாக 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் கூடுதலாக அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டில் 75 ஆயிரம் மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்’’.</p>
<p>இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். </p>