Bike Taxi Ban: சோதனை மேல் சோதனை.. பைக் டாக்சிகளுக்கு தடை... விழிபிதுங்கும் பெங்களூரு வாசிகள்

8 months ago 6
ARTICLE AD
<p style="text-align: justify;">கர்நாடகா உயர்நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குள் பைக் டாக்ஸி நடவடிக்கைகளை நிறுத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது, பெங்களூருவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p> <h2 style="text-align: justify;">பைக் டாக்சிகளுக்கு தடை:</h2> <p style="text-align: justify;">கர்நாடக உயர்நீதிமன்றம், ஓலா, உபர் மற்றும் ராபிடோ போன்ற பைக் டாக்சி சேவைகள், மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் கீழ் புதிய விதிமுறைகள் நிறுவப்படும் வரை ஆறு வாரங்களுக்குள் தங்கள் பைக் டாக்ஸி செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p> <div class="_1884" style="text-align: justify;"><span>இந்த நிறுவனங்கள் மீண்டும் பைக் டாக்சிகளை இயக்க முடியாது என்று நீதிபதி பி.எம். ஷாயம் பிரசாத் </span><span>நிறுவப்பட்ட விதிமுறைகள் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து வாகனங்களாகப் பதிவு செய்யவோ அல்லது ஒப்பந்த வண்டி அனுமதிகளை வழங்கவோ போக்குவரத்து அதிகாரிகள் தற்போது அங்கீகரிக்கப்படவில்லை என்பதை நீதிபதி பிரசாத் எடுத்துரைத்தார்.</span></div> <h2 class="_1884" style="text-align: justify;"><span>அரசுக்கு உத்தரவு:</span></h2> <div class="_1884" style="text-align: justify;"><span>"அரசாங்கம் பொருத்தமான விதிமுறைகளை அமல்படுத்தும் வரை, போக்குவரத்துத் துறையை மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து வாகனங்களாகப் பதிவு செய்யவோ அல்லது அத்தகைய சேவைகளுக்கான ஒப்பந்த வண்டி அனுமதிகளை வழங்கவோ கட்டாயப்படுத்த முடியாது" என்று அவர் கூறினார்.</span></div> <div style="text-align: justify;">&nbsp;</div> <div class="_1884" style="text-align: justify;"><span>பைக் டாக்சிகளுக்கான சட்ட கட்டமைப்பை உருவாக்க கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளது. இறுதி நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருப்போம் என்றும், இந்த சேவைகளுக்கான பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் பணியாற்ற இந்த நேரத்தைப் பயன்படுத்துவோம் என்றும் போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறினார்.</span></div> <h2 class="_1884" style="text-align: justify;"><strong><span>பைக் டாக்சி தளங்களில் தாக்கம்:</span></strong></h2> <div class="_1884" style="text-align: justify;"><span>கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தளமான Rapido, இந்த இடைநீக்கம் அதன் பயணிகளின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து கவலை தெரிவித்தது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "கர்நாடகாவில் பிறந்த Rapido, தளத்தில் உள்ள லட்சக்கணக்கான பைக்-டாக்ஸி கேப்டன்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது, மேலும் விரிவான உத்தரவு கிடைத்தவுடன் மதிப்பாய்வு செய்து பொருத்தமான சட்ட தீர்வுகளைத் தொடரும் என்று தெரிவித்தார்.&nbsp;</span></div> <h2 class="_1884" style="text-align: justify;"><span>ஆதரவும் எதிர்ப்பும்: </span></h2> <div class="_1884"><span>ஆட்டோரிக்&zwnj;ஷாக்களை விட ஏராளமான பயணிகள் தங்கள் செலவு குறைந்த பயன்பாட்டிற்காக பைக் டாக்சிகளை நம்பியுள்ளனர். ஐடி நிறுவன ஊழியர் ஒரு கூறுகையில், "ரேபிடோ பைக் டாக்சிகள் போக்குவரத்துக்கு அவசியமானவை, குறிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு," என்று சுட்டிக்காட்டினார்</span></div> <div class="_1884">&nbsp;</div> <div class="_1884"><span>ஆட்டோரிக்&zwnj;ஷா ஓட்டுநர்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். இது குறித்து ஆட்டோரிக்&zwnj;ஷா ஓட்டுநர் ஒருவர் தெரிவிக்கையில், "எங்கள் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்ததால் மட்டுமே நாங்கள் பைக் டாக்சிகளைத் தடை செய்யக் கோரி வந்தோம். அவர்கள்&nbsp; மலிவான சேவைகளை&nbsp; வழங்கினர், இது முற்றிலும் சட்டவிரோதமானது" என்று கூறினார்கள்&nbsp;</span></div> <div class="_1884" style="text-align: justify;">&nbsp;</div> <div class="_1884" style="text-align: justify;">&nbsp;</div>
Read Entire Article