Bengaluru: தொடர் சண்டை.. மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவன்!

2 months ago 9
ARTICLE AD
<p>கர்நாடகா மாநிலத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெங்களூரு நகரில் நடைபெற்றுள்ளது.&nbsp;</p> <h2><strong>இளம்பெண் தற்கொலை</strong></h2> <p>அங்குள்ள ராஜராஜேஸ்வரி நகரில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி ஆஷா &nbsp;என்ற பெண் தான் வசித்து வந்த அறையில் சீலிங் ஃபேனில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆர்.ஆர்.நகர் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பெயரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே ஆஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. அதில் ஆஷாவின் மரணம் தற்கொலை அல்ல, அது கொலை என தெரிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p> <h2><strong>திருப்புமுனையாக அமைந்த புகார்</strong></h2> <p>இதனைத் தொடர்ந்து மர்ம மரணம் வழக்கு கொலை பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் ஆஷாவின் சகோதரர் அருண்குமார் ஜனவரி 10 ஆம் தேதி காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆஷா, குனிகல் தாலுகாவில் உள்ள சாந்தேமாவதுரு கிராமத்தைச் சேர்ந்த விருபாக்ஷாவை திருமணம் செய்து கொண்டார். இவரும் காதலித்து தான் திருமணம் செய்தனர்.&nbsp;</p> <p>இந்த தம்பதியினர் பெங்களூருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தனர். ஆனால் திருமணமான ஆரம்பத்தில் இருந்தே விருபக்&zwnj;ஷா எனது சகோதரி ஆஷாவை சரியாக கவனிக்கவில்லை. அவர் சரியாக வேலைக்கு செல்லவில்லை. என் சகோதரி ஆஷாவின் வருமானத்தையே நம்பியிருந்தார். மேலும் தொடர்ச்சியாக விருபக்&zwnj;ஷாவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவர்களின் இல்வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு சென்றது.</p> <h2><strong>சிக்கிய கணவர், நண்பர்</strong></h2> <p>இந்த நிலையில் விருபக்&zwnj;ஷா, ஆஷா இருவரும் கடந்த ஒன்றரை மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விவாகரத்து கேட்டு ஏற்கனவே குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் போலீசாரின் சந்தேக பார்வை ஆஷாவின் கணவர் விருபக்&zwnj;ஷா மீது திரும்பியது. ஜனவரி 14ம் தேதி அவரும், அவரின் நண்பர் ஒருவரும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.</p> <p>இதில் விருபக்&zwnj;ஷா மனைவி ஆஷாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் தனது நண்பர் உதவியுடன் அவர் தற்கொலை செய்தததாக காட்ட உடலை சீலிங் பேனில் தொங்க விட்டதையும் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 8 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/eating-cashews-daily-get-amazing-benefits-247461" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article