<p>இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் நியமனத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் மே 14, 2025 அன்று பதவியேற்க உள்ளார். </p>
<p>இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சமூக ஊடக தளமான X இல் அறிவிப்பைப் பகிர்ந்துள்ளார்.</p>
<p>தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி கவாய், மே 14, 2025 முதல் தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.</p>