<p>அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ கல்லூரிகளில் பி.எட்‌. மாணவர்‌ சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு 20.06.2025 தொடங்கி 09.07.2026 அன்று முடிவடையும்‌ என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்‌ தெரிவித்துள்ளார்.</p>
<p>பி.எட். எனப்படும் ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளும் நபர்கள் மட்டுமே அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும். இது அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாகும். </p>
<p>இந்த நிலையில், இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பி.எட்‌. மாணவர்‌ சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு 20.06.2025 தொடங்கி 09.07.2026 அன்று முடிவடையும்‌ என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்‌ தெரிவித்துள்ளார்.</p>
<p><strong>இதுகுறித்து இன்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:</strong></p>
<p>அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ கல்லூரிகளில்‌ 2025- 26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட்‌ மாணவர்‌ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்‌ <a href="http://www.tngasa.in">www.tngasa.in</a> என்ற இணையதள முகவரியில்‌ பதிவு செய்யலாம்‌. விருப்பம் உள்ள தேர்வர்கள் 20.06.2025 அன்று முதல்‌ 09.07.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.</p>
<h2><strong>முக்கியத் தேதிகள் என்னென்ன?</strong></h2>
<p>18.07.2025 அன்று மாணவர்‌ தரவரிசைப்பட்டியல்‌ வெளியிடப்படும்‌.</p>
<p>21.07.2025 முதல்‌ 25.07.2025-க்குள்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ விருப்பக் கல்லூரியைத்‌ தேர்வு செய்யலாம்‌.</p>
<p>28.07.2025 அன்று மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும்‌. மாணவர்கள்‌ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள்‌ உள் நுழைவு ஐடி மூலம்‌ www.iwiase.ac.in என்ற இணையதளம்‌ வாயிலாக பதிவிறக்கம்‌ செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில்‌ சேர வேண்டும்‌.</p>
<h2><strong>முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது?</strong></h2>
<p>ஆகஸ்டு 6 முதல்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ கல்லூரிகளில்‌ முதலாம்‌ ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள்‌ துவங்கும்‌ என்று உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.</p>
<p>கூடுதல் தகவலுக்கு: <a href="http://www.tngasa.in">www.tngasa.in</a> </p>