Ayush Mhatre: CSK-வின் புதிய ப்ளான்! அணியில் இணைகிறாரா இளம் வீரர்? யார் இந்த ஆய்ஷ் மாத்ரே?

8 months ago 6
ARTICLE AD
<p>ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே (Ayush Mhatre) சேர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. &nbsp;அதிரடி பேட்ஸ்மென் ஆய்ஷ் மாத்ரேவின் கிரிக்கெட் பயணம் பற்றி காணலாம்.&nbsp;</p> <p><strong>ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா</strong></p> <p>ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. &nbsp;ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்றே சொல்லிவிடலாம். 10 அணிகள், 74 போட்டிகள் என சுவாரஸ்யமான தருணங்களுடன் கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது. தொடரில் ரசிகர்களின் பெரிதும் கொண்டாட கூடிய அணிகள் என்றால் சென்னை, மும்பை, பெங்களூர் என்றே சொல்லலாம். பத்து அணிகளுக்கும் ரசிகர்கள் இருந்தாலும் நட்சத்திர வீரர்கள் இருக்கும் அணியின் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறும். சென்னை, மும்பை அணிகள் புள்ளிப்பட்டியலில் &nbsp;முதல் நான்கு இடங்களில் கூட இல்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், 14 போட்டிகளே முடிந்துள்ளது. தொடர் முழுவதும் இன்னும் சுவாரஸ்யமான போட்டிகள் காத்திருக்கின்றன.</p> <p><strong>சென்னை சூப்பர் கிங்ஸ்</strong></p> <p>சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்திதது. சென்னை அணியின் ஃபீல்டிங், மிடில் ஆர்டர் பேட்டிங், தோனி 9-வதாக களம் இறங்கியது என பல்வேறு பிரச்னைகளை சென்னை அணி சந்தித்து வருகிறது. &nbsp;சென்னை அணி -0.7771 நெட் ரன் ரேட் உடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. பெங்களூர் அணியுடன் 16 ஆண்டுகளுக்கு பிறகு, சேப்பாக்கத்தில் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/ipl/who-is-aniket-verma-explosive-uncapped-batter-who-impressed-for-sunrisers-hyderabad-219966" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p>சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருந்தாலும் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு ஆளே இல்லை என்ற நிலையில் இருக்கிறது. சென்னை விளையாடிய போட்டிகளில் அணியின் ஃபீல்டிங் சொதப்பலோ சொதப்பல் என்றிருந்தது. பவர் ஹிட்டர், அணியை அதிக ஸ்கோரை Chase செய்யவோ, நல்ல டார்கெட்டை ஃபிக்ஸ் பண்ணவோ அணியில் யாரும் இல்லாதது சென்னை அணியின் பர்ஃபாமன்ஸை கேள்விக்குள்ளாகியுள்ளது. சென்னை அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அணியில் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. &nbsp;</p> <p><strong>தீர்வுக்கு தயாராகும் சி.எஸ்.கே.</strong></p> <p>சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பையைச் சேர்ந்த 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவை சேப்பாக்கத்துக்கு வர அழைப்பு விடுத்துள்ளது. சி.எஸ்.கே. அணி அவரை ட்ரையல்ஸூக்காக அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவிக்கையில், &ldquo; ஆம். ஆயுஷ் மாத்ரேவை நாங்கள் ட்ரெயல்ஸூக்காக அழைத்திருக்கிறோம். அவரின் கிரிக்கெட் ஆட்டம் இம்ப்ரெசிவாக இருக்கிறது. அணியில் புதிய வீரருக்கு தேவை ஏற்படுமாயின் அவரை ப்ளேயிங் XI-ல் சேர்க்கப்படலாம். இப்போதைக்கு யாரையும் தேர்வு செய்யவில்லை. இது Trial மட்டுமே.&rdquo; என்று தெரிவித்திருக்கிறார்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article