<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் மற்றும் 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அயலி ஆகிய சீரியல்கள் மகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. </p>
<p>கடந்த சனிக்கிழமை எபிசோடில் கல்யாண பெண் தற்கொலை செய்து கொள்ள தயாரான நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. </p>
<h2><strong>ஆட்டோ டிரைவரைத் தேடும் அயலி, இசை:</strong></h2>
<p>அதாவது, இசை விஷயம் அறிந்து அந்த பெண்ணை காப்பாற்ற அவள் வேறொரு பையனை காதலிக்கும் விஷயம் தெரிய வருகிறது. பிறகு இசை அந்த பையனோட சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுக்க சுபத்ரா என்ன பண்ணிட்டு இருக்க? என்று கோபப்படுகிறாள். </p>
<p>அதனை தொடர்ந்து அயலியும் பிடிச்சவனோட கல்யாணம் பண்ணி வைக்கிறது தானே சரி என்று சொல்ல, அவன் ஒரு ஆட்டோ ட்ரைவர் என்று தெரிய வருகிறது, இசை, அயலி ஆகியோர் இருவரும் அவனை தேடி கண்டு பிடித்து நாங்க கூட்டிட்டு வரோம் என்று சொல்கின்றனர். </p>
<h2><strong>கல்யாணத்தை நடத்தி வைப்பாரா ஆளுநர்?</strong></h2>
<p>மேலும் கவர்னர் கல்யாணத்திற்கு வருவதால் அவரிடம் சொல்லி கல்யாணத்தை நடத்தி வைக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் மற்றும் அயலி சீரியல்களின் மகா சங்கமத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>