Annamalai University: நீண்ட ஆண்டாக போராடும் அண்ணாமலை பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள்- கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்

1 month ago 2
ARTICLE AD
<p>நீண்ட காலமாக போராடிவரும் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p><strong>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:&nbsp;</strong></p> <p>&rsquo;&rsquo;நூற்றாண்டு கால வரலாறு கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சனைகளை உடனே தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும். ஆசிரியர்கள், ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற தாமதமாவதாலும், அவர்கள் உரிமையை பெற்றாக வேண்டி போராட்டங்களை நடத்துவதற்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.</p> <p>&nbsp;ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்குதல், முனைவர் பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குதல், ஆசிரியர்களுக்கான CAS பதவி உயர்வுகளை தாமதமின்றி&nbsp;&nbsp;வழங்கல், அயற்பணியிட ஆசிரியர்களை உள்ளெடுப்பு&nbsp;&nbsp;செய்தல், பல்கலைக்கழக&nbsp;&nbsp;துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை அயற்பணியிட ஆசிரியர்களைக் கொண்டு யு.ஜி.சி மற்றும் தமிழக&nbsp;&nbsp;அரசின் விதிமுறைகளின்படி&nbsp;&nbsp;வாரத்திற்கு&nbsp;&nbsp;ஒருவருக்கு வேளைப்பளு 16/14 மணிநேரம் என்ற&nbsp;&nbsp;விகிதத்தில் கணக்கிட்டு திரும்ப அழைத்தல், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுத்துறைகளைப் போலவே அனைத்து பணப்பயன்களையும் ஓய்வு பெற்றவுடன் வழங்குதல், 2019 CAS போர்டு தொடர்பாக Mandatory Courses&nbsp;&nbsp;விசயத்தில் யு.ஜி.சி மற்றும் தமிழக&nbsp;&nbsp;அரசு விதிமுறைகளுக்கு எதிரான ஆட்சிக்குழு தீர்மானத்தை கைவிடுதல், ஆட்சிக்குழு மற்றும் கல்விக் குழுக்களில் ஆசிரியர்&nbsp;&nbsp;சங்கங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கல், அனைத்து நிர்வாகப் பொறுப்பு காலியிடங்களும்&nbsp;&nbsp;நிரப்புதல், 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த அனைவரும் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமித்தல், ஆசிரியர்களுக்கான Superannuation உரிமை&nbsp;&nbsp;திரும்ப வழங்கல் ஆகிய ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்காக அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும்&nbsp;&nbsp;அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, போராடி பெற்ற சட்டப்படியான உரிமைகளும் கூட ஒவ்வொன்றாக பறிப்பப்படுகிறது. இவைகள் அவர்களது உரிமைக்கு எதிரானது.&nbsp;</p> <p><strong>மறுக்கப்படும் உரிமைகள்&nbsp;&nbsp;</strong></p> <p>நீண்ட காலமாக&nbsp;&nbsp;தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடிவருகின்றனர். ஆகவே ஆசிரியர்கள், ஊழியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை&nbsp;&nbsp;உடனடியாக&nbsp;&nbsp;நிறைவேற்றிட பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக&nbsp;&nbsp;அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்&rsquo;&rsquo;.</p> <p>இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/why-do-passports-have-different-colors-239128" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article