Anna University Issue: ஞானசேகரன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.! அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தீவிரம் காட்டும் எஸ்.ஐ.டி

11 months ago 7
ARTICLE AD
<p>அண்ணா பல்கலக்கழக வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <h2><strong>அண்ணா பல்கலைக்கழக விவகாரம்:</strong></h2> <p>கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் , சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.<br />இவ்வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவானது, இவ்வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.&nbsp;</p> <h2><strong>நேற்று வீட்டில்&nbsp; சோதனை:</strong></h2> <p>இந்நிலையில், நேற்று ஞானசேகரன் வசிக்கும் கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் ,10க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். சுமார் 6 மணி நேரம் ஞானசேகரன் வீட்டில் பெட்டி பெட்டிகளாக ஆவணங்களை புலனாய்வு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.</p> <p>இந்த நிலையில், ஞானசேகரன் மீதான வழக்கானது, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே , 3 முறை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.&nbsp;</p> <h2><strong>குண்டாஸ் சட்டத்தின்&nbsp; கீழ் வழக்குப்பதிவு</strong></h2> <p>அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் யாரிடமோ போனில் சார் என்று பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாக புகார் எழுந்தது. அதனால் யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அதிமுக, பாஜக &nbsp;உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.&nbsp;</p> <p>இவ்விவகாரம் குறித்த அமைச்சர் சேகர்பாபு, &ldquo; குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அந்த குற்றவாளி உடனடியாக பிடிகப்பட்டு முதல் கட்ட நிவாரணமாக அவர் கட்டோடு இருந்ததை பார்த்திருப்பீர்கள். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என&nbsp; தெரிவித்திருந்தார்.&nbsp;</p> <p>இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவானது, ஞானசேகரன் வீட்டில் நடத்திய சோதனையடுத்து, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது, ஞானசேகரன் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/education/top-10-fantasy-beasts-of-mythology-211478" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article