Anbumani VS Ramadoss: நாற்காலி போட்ட அன்புமணி.. போட்டோ கூட வைக்காத ராமதாஸ் - திக்குமுக்காடும் பாமக தொண்டர்கள்!

4 months ago 5
ARTICLE AD
<p><strong>Anbumani VS Ramadoss:</strong> தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் பயணித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாகவும், குறிப்பாக வட தமிழ்நாட்டில் முக்கியமான கட்சியாகவும் திகழ்வது பாமக. மறைந்த முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு நிகரான செல்வாக்குடன் இருப்பவர் ராமதாஸ்.&nbsp;</p> <h2><strong>சேர் போட்ட அன்புமணி:</strong></h2> <p>அவர் உருவாக்கிய பாமக இன்று குடும்ப சண்டையால் பிளவுபட்டு வருகிறது. கட்சியை முழுமையாக கைப்பற்ற அவரது மகன் அன்புமணியும், தான் இருக்கும் வரை தான் எடுப்பதே முடிவு என்பதில் திடகாத்திரமாக ராமதாசும் மாறி, மாறி மல்லுகட்டி &nbsp;வருகின்றனர். தாயை அடித்தார், பணத்தை கொடுத்து கட்சிக்காரர்களை இழுக்கிறார் என்று பாமக-வினரை அதிர வைக்கும் அளவிற்கு அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்காக பல புகார்களைத் தெரிவித்து வருகிறார்.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/08/11/4cc30318c6dd764d13ea388fb59983361754877475508102_original.jpg" /></p> <p>கட்சியின் முடிவுகளை யார் எடுப்பது? கூட்டணியை யார் முடிவு செய்வது? என்ற அதிகார மோதலே இதன் ஆணிவேராக உள்ளது. நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்ற நிலையில், மாமல்லபுரத்தில் அன்புமணி நடத்திய பாமக பொதுக்குழுவில் ராமதாஸிற்கு தனியாக இருக்கை போடப்பட்டு இருந்தது.</p> <p>மாமல்லபுரத்தில் ராமதாசை புகழ்ந்து பேசிய அன்புமணி ராமதாசால் கட்சியை நிர்வகிக்க முடியாத சூழல் இன்று உள்ளது என்றும், பதவிக்காக நான் வரவில்லை என்றும் பேசினார்.&nbsp;</p> <h2><strong>போட்டோ கூட வைக்காத ராமதாஸ்:</strong></h2> <p>இந்த நிலையில், பூம்புகாரில் ராமதாஸ் நடத்திய வன்னியர் மகளிர் மாநாட்டில் ராமதாஸ் - அவரது மனைவியார், மறைந்த குரு ஆகியோரது உருவ படங்கள் முகப்பில் வைக்கப்பட்டு இருந்தது.&nbsp;<br />ஆனால், அன்புமணியின் புகைப்படம் வைக்கப்படவில்லை.&nbsp;</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/08/11/121645d22a8c3417fcfa98845224a59d1754877508531102_original.jpg" /></p> <p>மேலும், அந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன், நான் சொல்வதுதான் நடக்கும், யார் சொல்வதையும் கேட்காதீர்கள், தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்று அன்புமணியை காரசாரமாக விமர்சித்து பேசினார்.&nbsp;</p> <h2><strong>அடிமட்ட தொண்டர்கள் வேதனை:</strong></h2> <p>பாமக-வினருக்கு என கணிசமான வாக்கு சதவீதம் இருக்கும் சூழலில், ராமதாஸ் - அன்புமணி இருவரும் தனித்தனி அணியாக பிளவுபட்டு நிற்பது பாமக அடிமட்ட தொண்டர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர்களது சண்டையால் யாருக்கு ஆதரவாக செயல்படுவது? என நிர்வாகிகள் இடையே ஆங்காங்கே மோதல் வெடித்து வருகிறது.&nbsp;</p> <h2><strong>என்னதான் நடக்கப்போகிறது?</strong></h2> <p>கட்சியின் மூத்த தலைவர்கள் எடுக்கும் சமாதான முயற்சிகளும் தோல்வியில் முடிந்து வரும் நிலையில், குடும்பத்தினர் இவர்களை சமாதானப்படுத்த எடுக்கும் முயற்சிகளும் தொடர் தோல்வியில் முடிந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், ஒருங்கிணைந்த பாமக-வாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வார்களா? அல்லது பிளவுபட்ட பாமக-வாக தேர்தலை எதிர்கொள்வார்களா? என்ற கேள்வியும் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/oil-bath-benefits-reduce-body-heat-freshness-skin-glove-231037" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article