Anbumani Vs Ramadoss ; ஆங்கிலம் தெரியாதவர் வழக்கறிஞர் பாலு - பாமக எம்.எல்.ஏ அருள்

1 day ago 2
ARTICLE AD
<p><strong>பா.ம.க&zwnj;. எம்.எல்.ஏ அருள் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் ;</strong></p> <p>இன்று அவசரமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பா.ம.க. என்றாலே மருத்துவர் ஐயா தான். 33 ஆண்டுகள் உழைத்தவர். தேர்தல் ஆணையத்தில் சில குளறுபடிகளை செய்து , பாமக தலைவர் என்ற உத்தரவை அவர்கள் பெற்றார்கள்.</p> <p>இதையெடுத்து நாங்கள் மருத்துவர் அய்யா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடி எங்களுக்கு நீதி கிடைத்தது. பாமக தலைவர் என்ற பதவி இப்போது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனர் மட்டும் தான்.</p> <p>தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் தெளிவான கருத்து தெரிவித்தது. இப்போது பாமக கட்சியினரை ஏமாற்றும் நோக்கில் மாயாஜாலம் வித்தைக் காட்டி இன்று பனையூரில் விருப்ப மனு வாங்குவதாக சொல்கிறார்கள்.</p> <p><strong>தேர்தல் ஆணையத்தை ஏமாற்றுகிறார்கள்</strong></p> <p>விருப்ப மனு பத்தாயிரம் பணம் கட்டி வாங்குகிறோம் என சொல்லப்படுகிறது. அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றக் கூடிய விஷயம். நீதிமன்றத்தை ஏமாற்றுகிறார்கள். அதற்காக டி.ஜி.பி.க்கு மருத்துவர் அய்யா தரப்பில் ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர் அய்யா தரப்பில் பாமக செய்தி தொடர்பாளர்கள் என்ற அடிப்படையில் உங்களிடம் இதனை தெரிவிக்கிறேன்.</p> <p>பாமக தரப்பினர் யாரும் இதனை நம்ப கூடாது. ரூ.10 ஆயிரம் வாங்கக் கூடாது. இப்போது டி.ஜி.பி.க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கும் மனு அளிக்கப்பட உள்ளது.&nbsp;</p> <p>இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. இது 04.12.2025 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் 34 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கி உள்ளது. இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அன்புமணி தலைவர் இல்லை என்று. தேர்தல் ஆணையத்திற்கு தவறான மனுக்கள் மற்றும் ஆதாரங்கள் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையமும் இதைத் தான் சொல்கிறது.</p> <p><strong>ஆங்கிலம் தெரியாத வழக்கறிஞர் பாலு</strong></p> <p>அன்புமணி தரப்பில் தான் சிவில் கோர்ட்டுக்கு போக வேண்டும். தீர்ப்பை அன்புமணி தரப்பு முழுவதும் படிக்கட்டும். நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து பொய்யாக மக்களை ஏமாற்றி பத்தாயிரம் பணம் பறிக்கிறார்கள். பாலு போன்று ஆங்கிலம் தெரியாத வழக்கறிடம் இதனை கொடுத்து படிக்க வைத்துள்ளார். நீங்கள் உயர்நீதிமன்றத்தை ஏமாற்றுகிறீர்கள். சில பத்திரிக்கையாளர்களை அவர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டு பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.</p> <p>மீண்டும் நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்&zwnj;. யாரும் விருப்ப மனு கொடுக்க வேண்டாம். அன்புமணி தான் துரோகி. ராமதாஸை கொலை செய்ய பார்க்கிறார் அன்புமணி. ராமதாஸை கொலை செய்து கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி. கூட்டணி பேச்சுவார்த்தை பாமக கூட்டணியை முடிவு செய்ய ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெற்றிக் கூட்டணி அமையும். தைலாபுரம் தோட்டத்தில் வந்து யார் கையெழுத்து போடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் முதல்வர் ஆவார் என்றார்.</p>
Read Entire Article