Actor Sathyaraj: "மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!

1 year ago 7
ARTICLE AD
<p>எங்களைப் போன்ற திராவிடர் கழகம் தலைவர் வீரமணியிடமோ அல்லது என்னைப் போன்றவர்களிடமோ, கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என கூறினால், நான் கடவுள் இல்லை நம்புகிறவன் , இருந்த போதிலும், உனக்கு கோயிலுக்குச் செல்ல உரிமை இருக்கிறது, உனக்காக குரல் கொடுப்போம். ஆனால் சேகர்பாபு என்ன செய்வார் தெரியுமா என சத்யராஜ் பேசியுள்ளார்.&nbsp;</p> <h2><strong>திமுக பவள விழா முப்பெரும் விழா:</strong></h2> <p>சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக பவளவிழா முப்பெரும் விழா முகப்பேர் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது</p> <p>இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகம் தலைவர் வீரமணி , நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திமுக தொண்டர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p> <p>அப்போது விழாவில் பேசிய நடிகர் பேசினார். அவர் பேசியதாவது &ldquo; தமிழ்நாட்டில் 2 விதமான நாத்திகவாதிகள் உள்ளனர். ஒருவர் கடவுள் இல்லையென்று இருப்பவர்கள். இரண்டாவது நபர்கள் , எங்களை போன்ற பெரியார்வாதிகள்.</p> <h2><strong>&rdquo;2 பெரியாரியவாதிகள்&rdquo;</strong></h2> <p>பெரியார்வாதிகளில் இரண்டு பிரிவினர் உள்ளனர். அதில் ஒருவர் , எங்களை போன்ற கடவுளை வணங்காதவர்கள். இரண்டாவது பிரிவினர் கடவுளை வணங்கும் சேகர்பாபுவை போன்றவர்கள்.</p> <p>கடவுளை வெறுத்த நாத்திவாதிகளிடம் சென்று , என்னை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என ஒருவர் கூறினால், இறைவனே இல்லை.! அங்கு போய் என்ன செய்ய போகிறார் என கூறுவார்.</p> <p>அவரே, எங்களைப் போன்ற திராவிடர் கழகம் தலைவர் வீரமணியிடமோ அல்லது என்னைப் போன்றவர்களிடமோ கூறினால், நான் கடவுள் இல்லை நம்புகிறவன் , இருந்த போதிலும், உனக்கு கோயிலுக்குச் செல்ல உரிமை இருக்கிறது. உனக்காக குரல் கொடுப்போம்.</p> <h2><strong>&rdquo;மதவாதிகளுக்கு சேகர்பாபுதான் பிரச்னை.!&rdquo;</strong></h2> <p>இதே சேகர்பாபு போன்றவர்களிடம் அவர் கூறினால், கோயிலுக்குள் செல்ல யார் தடுத்தது? நானே உன்னை அழைத்துச் செல்கிறேன் என அழைத்து செல்வார்.</p> <p>அதனால், மதவாத சக்திகளுக்கு எங்களைவிட சேகர்பாபு போன்ற பெரியார்வாதிகளால்தான் பிரச்னை என நடிகர் சத்யராஜ் பேசினார்.</p> <p>Also Read: <a title="சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-senthil-balaji-first-press-meet-after-came-out-from-puzhal-jail-said-about-cm-stalin-202182" target="_self">சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!</a></p>
Read Entire Article