45 நாள்களில் 6 முறை பாம்பு கடி.. உயிர் பிழைத்த 'அதிசய மனிதன்'.. உத்தர பிரதேசத்தில் விநோதம்!

1 year ago 7
ARTICLE AD
<p>உத்தர பிரதேசம் மாநிலம் ஃபதேபூர் நகரில் கடந்த 45 நாள்களில் 6 முறை பாம்பு கடித்த பிறகும் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அந்த நபரால் மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.&nbsp;</p> <p><strong>6 முறை பாம்பு கடித்த பிறகும் உயிர் பிழைத்த இளைஞர்: </strong>ஃபதேபூர் நகரில் வசித்து வருபவர் விகாஸ் துபே. கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, இவரை முதன்முதலாக பாம்பு கடித்துள்ளது. அன்று இரவு, படுக்கையில் இருந்து எழுகையில் பாம்பு கடித்திருக்கிறது. அவரை, உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.</p> <p>அவருக்கு இரண்டு நாள்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால், இந்த சம்பவம் நடந்து 8 நாள்களில் இரண்டாவது முறையாக பாம்பு மீண்டும் கடித்துள்ளது. இதன் காரணமாக, பாம்பின் மீதான பயம் அவரை வாட்ட தொடங்கியுள்ளது.</p> <p>அவரது பயம் அதிகரித்து வந்த போதிலும், அவர் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் ஒருமுறை வீடு திரும்பினார். தொடர்ச்சியான பாம்பு கடி சம்பவங்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.</p> <p>கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் 17ஆம் தேதி, விகாஸை மூன்றாவது முறையாக பாம்பு கடித்துள்ளது. இந்த முறை, அந்த பாம்பு கடி அவரது உயிருக்கே ஆபத்தாக மாறியுள்ளது.</p> <p><strong>வியப்பில் மருத்துவர்கள்: </strong>இதனால் அவர் சுயநினைவை இழந்தார். செய்வதறியாமல் தவித்த அவரது குடும்பத்தினர், அவரை மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விகாஸ் துபேவை அடிக்கடி பாம்பு கடிப்பதை கண்டு டாக்டர். ஜவஹர் லால் தலைமையிலான மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.</p> <p>ஆனால், மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்கள். இதுகுறித்து மருத்துவர் லால் கூறுகையில், &ldquo;இந்த வழக்கு விசித்திரமானது. மூன்றாவது பாம்பு கடிக்கு பிறகு, கிராமத்தை விட்டு வெளியேறுமாறு விகாஸை நான் அறிவுறுத்தினேன்" என்றார்.</p> <p>மருத்துவர்களின் ஆலோசனையை தொடர்ந்து, ஃபதேபூர் ராதா நகரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு விகாஸ் சென்றுள்ளார். இடத்தை மாற்றிய பிறகும், நான்காவது முறையாக பாம்பு அவரை கடித்துள்ளது. மீண்டும், அதே தனியார் மருத்துவமனைக்கு அவரை அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.</p> <p>குறிப்பிட்ட ஒரே நபரை பாம்பு தொடர்ந்து கடிப்பதை கண்டு மருத்துவர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால், இந்த முறையும் அவரை வெற்றிகரமாக உயிர் பிழைக்க வைத்துள்ளனர் மருத்துவர்கள். ராதாநகரில் உள்ள தனது அத்தை வீட்டில் ​​விகாஸ் துபேவை ஐந்தாவது முறையாக பாம்பு கடித்துள்ளது.</p> <p>இதையடுத்து, தங்கள் வீட்டிற்கே பெற்றோர் அவரை அழைத்து சென்றனர். ஜூலை 6 ஆம் தேதி, பாம்பு அவரை 6ஆவது முறையாக கடித்துள்ளது. மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.</p> <p>&nbsp;</p>
Read Entire Article