2030-க்குள் 10 பில்லியன் டாலர் ஏற்றுமதி.. அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் இந்திய ஜவுளித்துறை!

1 year ago 7
ARTICLE AD
<p>வரும் 2030ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளித் தொழில்&nbsp;10 பில்லியன் டாலர் இலக்கை தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.</p> <p>'வளர்ச்சி அடைந்த இந்தியா &ndash; நீடித்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப ஜவுளிகள்' என்ற பெயரில் நடந்த சர்வதேச மாநாட்டை&nbsp;தொடங்கி வைத்து பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இதனைத் தெரிவித்தார்.</p> <p><strong>தொழில்நுட்ப ஜவுளிகளின் முக்கியத்துவம்:</strong></p> <p>உலக அளவிலும்,&nbsp;உள்நாட்டு அளவிலும் வாழ்க்கையின் அனைத்து இடங்களிலும்,&nbsp;மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளின் நுகர்வு மற்றும் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை மத்திய அமைச்சர்&nbsp;சுட்டிக்காட்டினார்.&nbsp;&nbsp;</p> <p>தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் தொகுப்பையும்&nbsp;அவர்&nbsp;தொடங்கி வைத்ததுடன்,&nbsp;என்டிடிஎம்-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட&nbsp;11&nbsp;புதிய தொழில்களுக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழ்களையும் வழங்கினார்.</p> <p>இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளித் தொழிலின் வளர்ச்சியில் அரசு முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும்,&nbsp;தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம்,&nbsp;எம்.எம்.எஃப் ஃபேப்ரிக்,&nbsp;ஆடை மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான&nbsp;உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத்&nbsp;திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.</p> <p><strong>156 ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல்:</strong></p> <p>என்டிடிஎம் இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட முக்கிய முன்முயற்சிகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர்,&nbsp;கார்பன் இழைகளை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ்&nbsp;புத்தொழில்களுக்கு ஆதரவு உட்பட&nbsp;156&nbsp;ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த இலக்கை அடைவதில் மெடிடெக்,&nbsp;குறிப்பாக சுகாதார தயாரிப்புகளின் திறனை அவர் வலியுறுத்தினார்.</p> <p>விண்வெளி,&nbsp;ஆட்டோமொபைல் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும் பயன்பாடுகளைக் கொண்ட உயர் செயல்திறன் இழைகளை உருவாக்குவதில் உள்ளூர் தொழில்&nbsp;துறையினர்,&nbsp;அரசு&nbsp;மற்றும் பங்குதாரர்களின் திறனில் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p> <p>தனது உரையை நிறைவு செய்த மத்திய அமைச்சர், தொழில்நுட்ப ஜவுளித் துறையின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், உலகத் தலைவராகவும் மாறுவதற்கு அரசின் முழு ஆதரவையும் உறுதிபட தெரிவித்தார். தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் தொகுப்பையும் தொடங்கி வைத்த கிரிராஜ் சிங், என்டிடிஎம்-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 11 புதிய தொழில்களுக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழ்களையும் வழங்கினார்.</p> <p>மாநாட்டின் தொடக்க அமர்வில்,&nbsp;இஸ்ரோ தலைவரும் விண்வெளித் துறை செயலாளருமான டாக்டர் எஸ். சோமநாத்&nbsp;உள்ளிட்டோர்&nbsp;கலந்து கொண்டனர். மாநாட்டின் முதல் நாளில்,&nbsp;வேலைவாய்ப்பு,&nbsp;புத்தாக்கம்,&nbsp;சமூக தாக்கம் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் துறையின் எதிர்கால திசை குறித்த&nbsp;4&nbsp;குழு விவாதங்கள் இளடம்பெற்றன. குழு விவாதங்களில் அரசு பிரதிநிதிகள்,&nbsp;தொழில்துறை தலைவர்கள்,&nbsp;ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article