100 days challenge: 100 நாள் சவால்; மாணவர்களுக்கு தொடங்கிய  திறன் மதிப்பீடு; ஏன்? எதற்கு?

8 months ago 7
ARTICLE AD
<p>100 நாள் சவாலின் அடிப்படையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைத் திறன் மதிப்பீடு செய்யப்படுவதாக, தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p> <p>இதுகுறித்துத் தொடக்கப் பள்ளி இயக்குநர் கூறும்போது, தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய திறன்களில்&nbsp;<span style="font-family: Tahoma;">தயாராக உள்ளதாக </span>4,552 <span style="font-family: Tahoma;">தொடக்கப் பள்ளிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது</span>. <span style="font-family: Tahoma;">இந்தப் பள்ளிகளில் படிக்கும் </span>1 <span style="font-family: Tahoma;">முதல் </span>5<span style="font-family: Tahoma;">ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைத் திறனை அளவிட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது</span>.</p> <p><span style="font-family: Tahoma;">குறிப்பாக வகுப்புக்கு குறைந்தபட்சம் </span>5 <span style="font-family: Tahoma;">மாணவர்கள் வீதம் பரிசோதிக்கப்பட வேண்டும்</span>. <span style="font-family: Tahoma;">இதில் </span>1 <span style="font-family: Tahoma;">முதல் </span>3<span style="font-family: Tahoma;">ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று </span>(<span style="font-family: Tahoma;">ஏப்</span>. 4) <span style="font-family: Tahoma;">தமிழ்</span>, <span style="font-family: Tahoma;">ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களுக்கு மதிப்பீடு செய்யப்படுகிறது</span>.</p> <p>முன்னதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 100 நாள் சவாலை அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.</p> <p>பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு&nbsp; மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக&nbsp;புத்தகங்கள்&zwnj; மற்றும்&zwnj; கரும்பலகைகள்&zwnj; வாயிலாக நடைபெற்ற கற்றல், கற்பித்தல்&zwnj; நிகழ்வின்&zwnj; ஓர்&zwnj; உச்சமாக உரைகள்&zwnj;, படங்கள்&zwnj;, ஆடியோ மற்றும்&zwnj; வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில்&zwnj; தகவலைப்&zwnj; பெற்று பாடப்பொருள்களை எளிதாகப்&zwnj; புரிந்துகொள்ளவும்&zwnj;, பெற்ற தகவல்களைத்&zwnj; தக்கவைத்து கொள்ளவும்&zwnj; மற்றும்&zwnj; அரசு பள்ளிகளில்&zwnj; பயிலும்&zwnj; மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன்&zwnj; பொருத்தமான கற்றல்&zwnj; சூழலை உருவாக்கவும்&zwnj; 22,931 திறன்&zwnj; மிகு வகுப்பறைகள்&zwnj; ரூ.455.32 கோடி மதிப்பீட்டில்&zwnj; அரசு தொடக்கப்&zwnj; பள்ளிகளில்&zwnj; பயிலும்&zwnj; 11,76,452 மாணவர்கள்&zwnj; பயனடையும்&zwnj; அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>
Read Entire Article